Showing posts with label தமிழ் இலக்கியம். Show all posts
Showing posts with label தமிழ் இலக்கியம். Show all posts

Sunday, June 6, 2010

மென்முள்

நெடுங்காலமாக வாசிக்க நினைத்து, நேற்று வாசித்து முடித்த புத்தகம்-மோகமுள். தி.ஜா என்றவுடன் பலரும் சொல்லுவது மோகமுள். ஆனால் நான் 'அம்மா வந்தாள்', 'தி.ஜா சிறுகதைகள்', 'நடந்தாய் வாழி காவேரி', பிறகுதான் மோகமுள் வந்தடைந்தேன். மோகமுள், பல கிளை கதைகள், நிறைய கதாபாத்திரங்கள், பல்வேறுபட்ட கதை நிகழ்விடங்கள் என எந்த சிறந்த படைப்பாளியின் 'magnum opus'யிலிருக்கும் அனைத்து விசயங்களும் கொண்ட படைப்பு. எந்த ஒரு படைப்பாளியின் நெடுங்கனவு.

திஜாவின் எழுத்தில் ஒருவித எளிமை இருக்கும் . எதோ சாதரணமாய் செய்து விட்ட மாதிரி இருக்கும். அதை நாம் திருப்பி சொல்ல முயற்சிக்கும் போதுதன் தெரியும், அதிலுள்ள சிக்கல்கள். திஜா வின் முத்திரை, புத்தகத்தின் பல இடங்களில் காண முடிகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் இருக்கின்றதா என்றால் இல்லை. இது என் தனிப்பட்ட பிரச்சினையாக கூட இருக்கலாம். ஒரு ராகத்தை எடுத்து ஒரு மணி நேரம் அதில் உள்ள நுணுக்கங்களை காட்டுகிற திறமையுடைய பாடகர் ஒருவரின், '2 மணி நேரத்தில் 6 பாட்டு' கச்சேரி கேட்பது போல் உள்ளது. திஜாவின் மிக சிறந்த வித்தைகளை படித்து விட்டு 'மோகமுள் ளில்' கிடைப்பது, an average experience for thi.ja standard.

மோகமுள் திரைப்படமாக எடுத்து கொண்டு இருந்த நேரமது, தினமணி கதிரில் வந்த கட்டுரையில், இருவர் மோகமுள் வாசித்து விட்டு அதே நினைப்புடன் கும்பகோணம் சென்று ஏமாந்து வந்ததாய் ஒரு செய்தி இருக்கும். உண்மையில் ஒரு இடத்தை விவரிக்கும் போது நம்மை அங்கு கொண்டு போய் அமர்த்திவிடுகிறார். இக்கதை அரை நூற்றாண்டுக்கு முந்தயைது, என்பது மறந்து போய், அந்த தெருக்களில் நாமும் உலாவுகிறோம். அவற்றின் அழகில் மயங்கி அதை காண விழையும் நொடியில்தான் புத்திக்கு எட்டுகிறது, இது கதையென்பது. இத்தகைய மயக்கத்தை ஏற்படுத்துவதில் திஜாவைவிட சிறந்தவரை நான் இன்னும் வாசிக்கவில்லை.

நிகழ்வுகளை, எண்ண ஓட்டங்களை விவரிக்கும் போது இரண்டிரண்டு படிகளாய் துள்ளும் நடை வாசிப்பாளனிடம் ஒரு வித புத்திசாலிதனத்தை எதிர்பார்கிறது. இந்த jump திஜாவின் மற்ற படைப்புகளை விட இதில் அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது. பெரும்பாலும் கதை அதிகம் அலட்டிகொள்ளாது நிதானமாய் செல்லும் இரயில் போலவே செல்லுகிறது. ஆனால் முடிவில் எதோ துரித கதியில் எல்லோருடைய ஒப்புதலையும் பெற்று கதை முடியும் போது, இத்தகைய நாவலுக்குரிய முடிவாய் இல்லாமல் எதோ பின் குறிப்பு படிப்பது போல் உள்ளது.

திஜாவின் படைப்புலகில் சிக்கல்கள் பெரும்பாலும் கதாபாத்திரங்கள் உளசிக்கல்களேயன்றி, பிற மனிதர்களாலோ, நிகழ்வுகளாலோ வருவது அல்ல. வளைவுகளோ, திருப்பங்களோ இல்லாத , இரு பக்கங்களும் பசுமை எழில் நிறைந்த சாலையில் நடப்பது போன்ற ரம்மியமான அனுபவம். பிரச்சினை கதை இப்படியே 700 பக்கங்களுக்கு செல்லும் போது ஒரு வித தொய்வு ஏற்படுகிறது. இதனால்தான் என்னவோ எனக்கு இன்றும் , நான் பள்ளியில் படித்த சிறுகதை (கருணையே உருவான ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை தண்டித்துவிடுதல் பற்றிய கதையது) ஏற்படுத்திய தாக்கத்தை மற்றவை ஏற்படுத்துவதில்லை.

Saturday, February 24, 2007

கவிதை

வெண்பா இலக்கணத்தை மீண்டும் படித்தது முதல் எதையாவது ஏழு சீருக்குள் தளை தட்டாமல் எழுதி விடவேண்டும் என முயன்று தோற்று போகின்ற நொடியில் தோன்றிய வரியை கொஞ்சம் மாற்றி அமைத்தால் குறள் வெண்பா இலக்கணத்துக்குள் அமைந்த சொற்றொடர் வந்தது. இதை கவிதை என்று சொல்ல மாட்டேன். எப்படி ஆங்கிலத்தில் house, home இரண்டுக்கும் வேறுபாடு உள்ளதோ அது போல் கவிதைக்கும், கவிதை போலுக்கும் இடையேவும் உண்டு. அந்த வித்தியாசத்தை வார்த்தைகளால் வரையறுக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அது ஒரு 'feel factor'.
கவிதை அனுபவம்/ உணர்வு சார்ந்த ஒன்று. ஆகையால் அனைவருக்கும் ஒரு கவிதை, கவிதையாக தெரிய வேண்டியதில்லை. ஆனால், 'கவிதை போன்ற' ஒன்று யாருக்குமே ஒரு உணர்வை தராது. அது வெறும் தட்டையான சொற்களின் தொடர்ச்சி. மரபு கவிதை என்பது புள்ளி வைத்து கோலம் போடுவது போன்ற ஒரு செயல். மரபு கவிதைக்கு ஆதரவாக பல காரணங்கள் கூறபட்டாலும் (இசைக்குள் சுலபமாக நுழைவது ...) என் பார்வையில் தோன்றும் ஒரு காரணம், அது படைப்பாளிக்கு கூடுதலான நிறைவை தரும் என்பது. ஒரு நெரிசலான சாலையில் லவகமாக பேருந்தை ஓட்டுபவனுக்கும் புறவழிசாலையில் ஒட்டுபவனுக்கும் உள்ள வேறுபாடு போல். நீ சொல்ல நினைத்ததையே, நான் இன்னும் குறைவான சாத்தியங்களுக்குள் சொல்லிவிட்டேன் என்ற ஒரு edge. இது தான் பெரும்பான்மையான தமிழாசிரியர்களை மரபு சார்ந்தே எழுத தூண்டுகிறது என்று நினைக்கிறேன். அதே போல் இலக்கணம் அறிந்த வாசகனுக்கும் ஒரு பிரமிப்பு. "இத்தன fielder நிக்க வெச்சும் 4 அடிச்சிட்டான்யா!!" என்பது போன்று. இந்த பிரமிப்புக்கு ஈடு செய்வதற்காகத்தான் மரபு சாரா கவிதை எழுதுவோர் ஒரு புன்முறுவலையோ, இமை உயர்தலையோ தரக்கூடிய புத்திசாலிதனமான வரிகளை தங்கள் கவிதையில் வைத்துவிடுகிறார்கள். பரவலான மக்களால் ஏற்று கொள்ள பட வேண்டிய மரபு சாரா கவிதைக்கு இந்த 'புத்திசாலித்தனமான வரியே' ஒரு இலக்கணம் ஆகி விட்டது.

நான் எழுதிய அந்த 'குறள் வெண்பா' சொற்றொடர்:

தளை:
"எப்படிச் சொன்னாலும் எங்கேனும் தட்டு
வதுதட்ட வில்லை இதில்"

Monday, February 19, 2007

திருக்குறள்-3

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
அர்த்தம் புரிந்து கொள்வதற்கு மிக எளிமையான குறள். எங்கள் ஊர் பேருந்துகளில் அதிகம் பயன்படுத்த பட்ட குறள். ஆனால் என்னுள் இந்த குறள் அதிகம் தாக்கம் ஏற்படுத்தியது வேலைக்கு சேர்ந்த பின்தான். வார்த்தைக்கும் வாழ்க்கைகும் இடையே பள்ளம் விழும் இடங்களில் எல்லாம் மனதுள் ஒலிக்கும் குறள். திருக்குறள் பகுப்பு முறையும், அது ஒருவரால் படைக்க பட்டது என்பதும் பலரால் நிறுவ படுகிறது. இருந்தாலும்,
அது தொட்டுச் செல்கின்ற கருத்துக்களை காணும் போது அது ஒருவரால் ஒரே சமயதில் படைக்க பட்டிருக்க முடியுமா என்ற சந்தேகமே/ மலைப்பே எழுகிறது. துறவறத்தையும், காமத்துப்பாலையும் ஒரே stretchil எழுத முடியுமா? அப்படி இல்லை என்றாலும் முதல் குறள் படைத்த காலத்திலேயே இவ்வளவு பெரிய படைப்பு பற்றிய எண்ணம் இருந்திருக்குமா? ஆனால், என்னிடம் ஒரு முடிவை எடுத்துக்கொள்வதற்கு தேவையான அளவு ஆதாரங்கள் இல்லை. இன்றைய நிலையில் நான் திருக்குறள் ஆதிமூலம் பொருத்தவரை ஒரு agnostic.
இந்த குறள் வினைதிட்பம் கீழ் வருகிறது. ஆனால் எனக்கு இது 'ஒரு தனி மனிதனின் எண்ணங்களுக்கும் சமூக எதிர்பார்ப்புகளுக்கும் இடையே வேறுபாடுகள் தோன்றுகிற இடத்துக்கும் பொருத்தமான' குறளாகவும் தோன்றுகிறது. theory of relativity எப்படி இயற்பியல் தாண்டியும் பொருந்துமோ, அதுபோல இது செயலை தாண்டியும் அர்த்தபடுகிறது.

Sunday, February 11, 2007

திருக்குறள்-2

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்."

குறள் படித்த அனைவரும் கட்டாயம் கேள்வி பட்டிருக்க கூடிய குறள். நீண்ட காலத்திற்கு இக்குறள், கல்வியின் பயன் கடவுளை வணங்குவது எனும் பொருள் தருவதாகவே மட்டுமே தோன்றியது. பின் வாலறிவன் என்ற சொல் சமண சொல் என்ற வாதம் கேள்வி பட்டேன். கல்வியின் பயன் அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்றல் எனும் 'நாத்திக' கருத்து அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாய், வாலறிவன் = அனைத்தும் அறிந்தவன் எனும் அர்த்தம் வருமோ எனத் தோன்றியது. அப்படி சாத்தியப்பட்டால் , அனைத்தும் அறிந்தவர் பாதம் தொழாவிட்டால் கல்வியின் பயன் இல்லை என அர்த்தபடுகிறது. அனைத்தும் அறிந்தவர்(ன்) இருக்க முடியுமா ?( கடவுள்??). அல்லது ஒட்டுமொத்த அறிவுக்கு கொடுக்கபட்ட உருவம்தான் வாலறிவனோ?. பாதம் பனிதல் என்றால் அடக்குத்துடன் இருத்தல் எனக் கொள்ளலாம். அப்படி என்றால், "அறிவுலகின் முன் பணிவுடன் இருத்தல், அதாவது கற்றது கைமண் அளவு என்பதே கல்வியின் பயன்."

Saturday, February 10, 2007

திருக்குறள்-1

என் பள்ளி காலங்களில் நான் திருக்குறளை கவிதை என்ற வட்டதிற்குள் வைத்ததே இல்லை. எல்லோரும் குறளை புகழ்வதை படிக்கும் / கேட்கும் (என் அப்பாவும் மற்றொரு மாமாவும்) போதெல்லம் எனக்கு, “இதில் என்ன இலக்கண வரையறைக்குள் எகப்பட்ட கருத்துகள் உள்ளன , ஆனால் கவிதை?....” என்ற எண்ணமே தோன்றும். வைரமுத்தும், மேத்தாவும் எழுதிய "கவிதைகளில்" சொக்கி கிடந்த காலம்.

காலம் மாற உணவு ரசனைகள் மட்டும் அல்ல கவிதை சார்ந்த ரசனைகளும் மாறின. இந்த மாற்றதிற்கு காரணம் சில வாழ்வியல் அனுபவங்கள், அந்த நொடியில் மனதில் மின்னிய குறள்கள். மற்றொன்று, நம்ம ஊர் அரசு பேருந்துகள். என்னோட எண்ண படி 20 குறளுக்குள் ஒன்றைதான் எல்லா அரசு பேருந்திலும் எழுதி இருக்கிறார்கள். சினிமா பாடல்கள் கூட ஒலிக்காத அந்த பேருந்து பயணங்களில் நம்மையும் அறியாமல் நம் உள்ளே போய் தங்கிவிடும் அந்த குறள்கள் ஒரு புதிய பரிமானத்தை காட்டும்.

நான் பதிவு செய்ய விரும்புவது திருக்குறளுக்கு அர்த்தம் அல்ல. மு.வா தொடங்கி வைத்ததை பல பேர் தொடர்ந்து விட்டார்கள். சான்டியல்யன், சுஜாதா கூட உரை எழுதி உள்ளனர். நான் குறளையோ, எந்த உரையையோ முழுதாக படிதவன் இல்லை. ஆனால் நான் புரட்டிய வரையில் பெரும்பாலும் குறளுக்கு உரை எழுதிய நொடியில் மட்டும் எல்லாரும் மு.வா ஆக இருந்திருக்கிறார்கள். சுஜாதாவின் கதைகளில்/கட்டுரையில் இருக்கும் எள்ளல் கலந்த நடையையோ, கலைஞரின் வார்த்தை விளையாட்டையோ எதிர்பார்த்தால் மிஞ்சுவது எமாற்றமே! ஒரு வேளை இவர்கள் எதோ குறிப்பிட்ட குறள்களுக்கு மட்டும் (சாண்டில்யன் காமத்து பாலுக்கு) உரை எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ..

நான் பதிவு செய்ய போவது என்னை ஈர்த்த குறள்களை பற்றிய என் உளறல்களை தான்.

Saturday, December 16, 2006

ரசித்த கவிதை

காதல் தோல்வி, காதலி அழகு, உணர்ச்சிகரமன வரிகள் இல்லாமல் சற்றே இயல்பன தொனியில் சில கவிதைகளை இந்த தளத்திள் கான முடிகிறது. நான் நல்ல கவிதை என்று நினைக்கும் இலக்கணுதுக்குள் வரும் கவிதை Kuzhandhaiyin Dosai .

Personal note:
As I find his works different from other in this genre I clicked his profile. As usual an engineer with different interests. His profile sounded in line with my expectations. Patterns match but still i think that i read too much between lines. More evidences needed . Let me wait and see.

Saturday, December 9, 2006

தமிழ் கற்பதனால் ஆய பயனென்

I am not an erudite to say whether learning in mother tongue will help in understanding things better. I am neither pushing the emotional angle of Tamil-our identity etc..

I accept the fact that in the present scenario learning Tamil is not going to give one any monetary gains. But I belong to a group that doesn’t believe all we do in life should give us some monetary benefit. If you belong to that clause and if you believe life is all about experience, then I have a point to say. Learn Tamil just to read it’s exhaustive literature treasure. I don’t know any language other than Tamil and English. So don’t take it as I am comparing Tamil with other languages.

For me a literature /movie is good if it can be identified with one in some way.When I say it should able to identify with one what I mean is: “At some moment in your life (it can be a trifling moment) out of context, a piece of prose that you read somewhere, sometime , pops up in your memory and you feel it aptly fits what you feel at the current moment. Or while you are reading a piece the character in it undergoes or speaks about what you have / had underwent.” So one’s opinion about a book is dynamic, book which one liked a year back may not be in his wish list now. What one hasn’t liked at first read might be his favorite now. A book that I feel as good one might not be felt so by someone. Or different people could like it for their own reasons. In short “it’s a feel factor”. Everyone will have his own world to cherish. But there are few works that have something for you to cherish at any time. It could be written thousand years back, but today it could be relevant to you. Tamil have lot of works like that.I am planning to write a separate article on such experience.

The other point is the phonetics of Tamil-the rhythm, sound effects and associated limit less possibilities. To feel this just hear speeches of vai kopalswamy, dialogues uttered by sivaji ganeshan in films like manohara or read some works of annadurai, karunanidhi. One will like to read it aloud and hear back what they read. This is a thing which attracted lot of people towards tamil and I like the dravidan people like bharathidasan, karunanidhi, annadurai for this fact