Monday, February 19, 2007

திருக்குறள்-3

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
அர்த்தம் புரிந்து கொள்வதற்கு மிக எளிமையான குறள். எங்கள் ஊர் பேருந்துகளில் அதிகம் பயன்படுத்த பட்ட குறள். ஆனால் என்னுள் இந்த குறள் அதிகம் தாக்கம் ஏற்படுத்தியது வேலைக்கு சேர்ந்த பின்தான். வார்த்தைக்கும் வாழ்க்கைகும் இடையே பள்ளம் விழும் இடங்களில் எல்லாம் மனதுள் ஒலிக்கும் குறள். திருக்குறள் பகுப்பு முறையும், அது ஒருவரால் படைக்க பட்டது என்பதும் பலரால் நிறுவ படுகிறது. இருந்தாலும்,
அது தொட்டுச் செல்கின்ற கருத்துக்களை காணும் போது அது ஒருவரால் ஒரே சமயதில் படைக்க பட்டிருக்க முடியுமா என்ற சந்தேகமே/ மலைப்பே எழுகிறது. துறவறத்தையும், காமத்துப்பாலையும் ஒரே stretchil எழுத முடியுமா? அப்படி இல்லை என்றாலும் முதல் குறள் படைத்த காலத்திலேயே இவ்வளவு பெரிய படைப்பு பற்றிய எண்ணம் இருந்திருக்குமா? ஆனால், என்னிடம் ஒரு முடிவை எடுத்துக்கொள்வதற்கு தேவையான அளவு ஆதாரங்கள் இல்லை. இன்றைய நிலையில் நான் திருக்குறள் ஆதிமூலம் பொருத்தவரை ஒரு agnostic.
இந்த குறள் வினைதிட்பம் கீழ் வருகிறது. ஆனால் எனக்கு இது 'ஒரு தனி மனிதனின் எண்ணங்களுக்கும் சமூக எதிர்பார்ப்புகளுக்கும் இடையே வேறுபாடுகள் தோன்றுகிற இடத்துக்கும் பொருத்தமான' குறளாகவும் தோன்றுகிறது. theory of relativity எப்படி இயற்பியல் தாண்டியும் பொருந்துமோ, அதுபோல இது செயலை தாண்டியும் அர்த்தபடுகிறது.

1 comment:

RAM said...

I read this topic and trying to find a similar word in english

I guess following word and it's meaning suits to it..correct me if am wrong..

Reality :
The quality possessed by something that exists; All of your experiences that determine how things appear to you; The state of existing; The state of the world as it is rather than as you might want it to be