Saturday, March 7, 2009

விலாசமில்லாத மடல்

வார்த்தை கடலில் ,
நமக்கான உறவை சொல்லும் வார்த்தை,
சிப்பிக்குள் முத்தாய், எங்கோ...

நான் வருண பகவானல்ல...
ஆனால் பாசியில் இருந்து முத்துக்களை
பிரிக்க தெரிந்தவன்.........

உன்னை நான் அறிமுகபடுத்துவதற்கான வார்த்தை
என்றேனும் சரியான சிப்பியில் விழும்...
என்றேனும் என் கரை தொடும்....

ஆனால்,
அன்று என் அருகில் இருப்பாயா நீ?
இல்லை நம் உறவு
இறந்த காலம் ஆகி இருக்குமோ?


(பி.கு). உனக்கு தெரியும் இது உனக்கு தானென்று..

1 comment:

Anonymous said...

Arumai.